Translate

ஞாயிறு, 31 மார்ச், 2013

சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் -1 - Siththar Cave

சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - 1 - Siththar Cave









சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம்

உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து  மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங் கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் கைலாய மலை எனப் போற்றப்படும் சதுரகிரிமலை இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் சுருளி மலை ஆகும். இம்மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 –வருடங்களு க்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது.அதில் உள்ள விபரம் :-

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? 

என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலை வில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி, சுருளி தீர்த்தம் என்ற பெயரில் மிகவும்  பிரசித்தி பெற்றது ஆகும் .இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தி யாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வதில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் கைலாச நாதர்குகை  உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும் பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் மார்கழியார் என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும், சுருளிமலையில் மறைந்துள்ள கிருஷ்ண பகவானின் புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்னதானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத் தனை சுலபமல்ல. கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான்     போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம்       கழித்து வெளியே வந்து அவன்  சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தன வாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது தேவ ரகசியம் என்றும் அந்த சிறுவன் கூறினான். 

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் கண்ணகி கோயில் [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சுருளிமலை பற்றிய சித்தர் இரகசியங்களை அடுத்த பதிவில் காணலாம்.


நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

www.siddharprapanjam.org        .
செல் :98654302359095590855 - 9655688786





சித்தர் பொக்கிஷம் - குழு அறிமுகம் Siththar Pokkisam - Team

சித்தர் பொக்கிஷம் - குழு  அறிமுகம் 








சித்தர் பொக்கிஷம் - குழு  அறிமுகம் 



அன்புடைய நண்பர்களே வணக்கம் !

நம் தமிழ்மரபில் தோன்றிய சித்தர் பெருமக்கள் பேரருள் கொண்ட இறைவனி டம் வேண்டி,தங்கள் ஞானத்தால் கண்டறிந்த அருட் கலைகளான யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், சோதிடம், மந்திரம், சரகலை, பஞ்சபட்சி, முப்பு, காயகற்பம், வர்மம் போன்ற அரிய கலைகளை தங்களின் பாரம்பரிய வழித்தோன்றல்களான சீடர்களும், மனித குலமும் பயன் பெரும் வகையில் “ஓலைச்சுவடி"களில் பாடல்கள் வடிவில் பல லட்சம் பாடல்களாக வடித்துள்ள னர்.



இவைகள் காலப்போக்கில் சுவடிகளில் உள்ளவைகளை படி எடுத்து பதிவு செய்யாமலும் சரியான வழிமுறைகளில் பாதுகாத்து பராமரிக்காமல் விட்ட தால் அழிந்தவை ஏராளம். அனாலும் இன்றும் பல ஆன்மீக மடாலயங்களி லும், பாரம்பரிய சித்த மருத்துவர்களிடமும், பரம்பரை ஜோதிடர்களிடமும், தமிழறிஞர்களிடமும், சித்தர் கலை ஆய்வாளர்களிடமும் தமிழகத்திலும், மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாநிலங்களிலும் பழமையான ஓலைச்சுவடி களாகவும்,பல ஆண்டுகளுக்கு முன் பதிப்பித்த நூல்களும் ஏராளமானவை உள்ளன.

மேலும் சித்தர் கலைகளின் அரிய சூட்சும பரிபாஷை விளக்கங்கள், தொன்று தொட்டு,இன்று வரை குரு சீட வழியில் போதிக்கப்பட்டு வரப்படுகின்றது. 


இவைகளில் உள்ள அரிய வாழ்வியல் தத்துவங்களையும்,நோய்கள் தோன்றா நெறிமுறைகளையும், நோய்கள் தீர்க்கும் மருந்து முறை களையும், பஞ்சபூத - நவக்கிரக - பிரபஞ்ச இரகசிய விதிகளையும், அண்டத்தில் உள்ளதே பிண்டத் தில் என்ற சூட்சும விளக்கங்களையும், பிறவிமுக்தி ஞானம் பெறவும்,பேரருள் இறைஞானம் அடைவதற்கும் மேற்கண்ட சித்தர் கலை களில் உள்ள அரிய கருத்துக்களை பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும்,  நன்மை பெறவும், சித்தர் பாடல்களில் உள்ள பரிபாஷை மற்றும் சந்தேகங்களுக்கான விளக்கங்களும், சித்தர் குருகுல பாரம்பரிய வழி முறைகளில் கையாண்டு வரும் அரிய இரகசியங்களை தொடர்ந்து பதிவு செய்கின்றோம்.

நம் பழந்தமிழரின் மெய்யறிவு சார்ந்த கருத்துக்களையும், சித்தர்களின் கலைகள், தத்துவங்கள், அறிவியல் ஆய்வு சார்ந்த கருத்துக்களை உலகிலுள்ள தமிழறிந்தோர் பயன் பெறவே பதிவு செய்கின்றோம். !


சித்தர்களின் புகழை பாரெங்கும் விதைப்போம் நன்றி !



நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

www.siddharprapanjam.org        .
செல் :98654302359095590855 - 9655688786