Translate

ஞாயிறு, 31 மார்ச், 2013

சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் -1 - Siththar Cave

சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - 1 - Siththar Cave









சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம்

உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து  மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங் கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் கைலாய மலை எனப் போற்றப்படும் சதுரகிரிமலை இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் சுருளி மலை ஆகும். இம்மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 –வருடங்களு க்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது.அதில் உள்ள விபரம் :-

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? 

என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலை வில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி, சுருளி தீர்த்தம் என்ற பெயரில் மிகவும்  பிரசித்தி பெற்றது ஆகும் .இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தி யாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வதில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் கைலாச நாதர்குகை  உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும் பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் மார்கழியார் என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும், சுருளிமலையில் மறைந்துள்ள கிருஷ்ண பகவானின் புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்னதானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத் தனை சுலபமல்ல. கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான்     போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம்       கழித்து வெளியே வந்து அவன்  சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தன வாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது தேவ ரகசியம் என்றும் அந்த சிறுவன் கூறினான். 

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் கண்ணகி கோயில் [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சுருளிமலை பற்றிய சித்தர் இரகசியங்களை அடுத்த பதிவில் காணலாம்.


நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

www.siddharprapanjam.org        .
செல் :98654302359095590855 - 9655688786





5 கருத்துகள்:

  1. காத்துக் கொண்டு இருக்கிறோம்.முக புத்தக(facebook) குழு ஏதும் உள்ளதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணகுமார் வீரபாண்டியன் ஐயா !

      முகப் புத்தகம் - [Face Book] இதில் சுவர், குழு மற்றும் பக்கம்
      மூன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

      முக புத்தகம் கணக்கில் உள்ளே சென்று - siththar.pokkisam என
      சர்ச் செய்து ரிக்வெஸ்ட் கொடுங்கள்.குழு மூடிய குழுவாக
      செயல் படுகின்றது.

      நன்றி !
      சித்தர் பொக்கிஷம் குழு -blog
      சித்தர் பொக்கிஷம் குழு -face book
      siththarpokkisam@gmail.com

      நீக்கு
  2. அகத்திய பெருமான் நிகழ்த்திய அற்புத திருவிளையாடல்களை நாடி சொல்லும் கதைகள் என்ற பெயரில் ஸ்ரீ அனுமத்தாசன் எழுதியிருக்கிறார். மொத்தம் 5 பாகங்கள். வாங்கி படித்து இன்புற விரும்புவர்கள் அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை கைபேசி எண் 9444160161 தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அன்புடையீர்,

    ஒம் அகத்திசாய நம !!!

    கருணை உள்ளம் கொண்ட கும்ப முனியின் அருளால் வைகாசி வளர்பிறையில் இருந்து, கோயம்புத்தூர் அருகே உள்ள கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில் அகத்தியர் ஜீவ அருள் நாடியில் அருள்வாக்கு வருவதாக தகவல் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

    தொடர்பிற்கு மாதாஜி சரோஜினி - 9842550987

    கல்லார் அகத்தியர் ஞான பீட முகவரி :
    Sri Agathiar Gnana peedam
    2/464-E, Agathiar Nagar,Thoorippalam
    Kallar-641305,Mettupalayam,Coimbatore Dt, Tamilnadu, India
    PH:98420 27383, 98425 50987.
    ( மேட்டுப்பாளையம் to ஊட்டி மெயின் ரோட்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 வது கிலோமீட்டரில் கல்லார் உள்ளது. )

    நாடி பார்க்கும் நாள்:சனிக்கிழமை மட்டும்
    நேரம் :9 மணி முதல் 2 மணி வரை
    கட்டணம்:500/- ரூபாய்.
    ஒம் அகத்திசாய நம !!!
    ஒம் அகத்திசாய நம !!!
    ஒம் அகத்திசாய நம !!!

    பதிலளிநீக்கு
  4. உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.

    பிராணா அறக்கட்டளையின்
    சித்தர்கள் ஆலயம்
    126 சித்தர்களின் ஜீவஜோதி மையம் நடத்தும்

    ஜீவசமாதியிலிருந்து உயிர்த்தெழும் சித்தர்களை வரவேற்கும் நிகழ்வும்,
    தன்னுள்ளே தன்னை கண்டு உணரும் மெஞ்ஞான பயிற்சி மாநாடும்

    ஆம்.. சித்தர்கள் உயிர்த்தெழும் வருடம். கலியுகம் 5116‍‍ - ஸ்ரீஜெய வருடம்

    நடைபெறும் நாள் ‍‍- 13‍‍-04-2014
    சூரிய நாள் - ஞாயிற்றுக்கிழமை - கலியுகம் 5115 - ஸ்ரீ விஜய வருடம்
    நேரம் - காலை சரியாக 9.50 மணி முதல் மாலை 5.00 மணி வரை
    இடம் - பாலமந்திர் ஜெர்மன் ஹால், எண்.17, பிரகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.

    https://www.facebook.com/Siddhargalaalayam.org

    பதிலளிநீக்கு